news blogger news blogger Author
Title: உங்கள நட்சத்திரத்திற்கான பரிகாரத் தலங்கள்
Author: news blogger
Rating 5 of 5 Des:
பிரச்சினை தீர்க்கும் கோயில்கள் -மிருகசீரிடம் முதல் சுவாதி வரை மிருகசீரிடம் பிறைச் சந்திரனை அணிந்தவாறு இறைவன் அருள்பாலிக்கும் தலங்கள் ...
103
பிரச்சினை தீர்க்கும் கோயில்கள் -மிருகசீரிடம் முதல் சுவாதி வரை
மிருகசீரிடம்
பிறைச் சந்திரனை அணிந்தவாறு இறைவன் அருள்பாலிக்கும் தலங்கள் பலவும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் வழிபட சிறந்த தலங்கள் ஆகும். அந்தத் தலங்களில் சில:
ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள சந்திரசூடேசுவரர் – மரகதாம்பிகை திருக்கோயில். பஞ்சலிங்கத் தலமாகவும் திகழும் தலம்.
கிருஷ்ணகிரி: தர்மபுரிக்கு வடக்கே 48கி.மீ தொலைவில் சந்திரமௌலீசுவரர் – பார்வதியம்மை திருக்கோவில்.

முசிறி: கரூர் மாவட்டம், காவிரியின் வடகரையி;ல் உள்ள தலம். கற்பூரவல்லி சமேதராக சந்திரமௌலீசுவரர் அருள்பாலிக்கிறார்.
தாழமங்கை: தஞ்சை – பாபநாசம் சாலையில், அய்யம்பேட்டை அருகில் உள்ளது சந்திரமௌலீசுவரர் கோயில்.

எண்கண்: திருவாரூர் – தஞ்சாவூர் சாலையில் முகுந்தனூருக்கு
வடக்கே உள்ளது. இங்குள்ள ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில், கருடவாகனராக, மூலவர் பெருமாள் காட்சி தரும் ஒரே திருத்தலம்.

மிருகசீரிட நட்சத்திர மந்திரம்
ஸ்வேதவர்ணா க்ருத்: ஸோமோ த்வி புஜோ
வரதோ அஸ்துமே,
தஸாஸ்வர தமாருடோ மிருகசீர்~;ய தேவதா,
சந்திர காயத்ரி மந்திரம்
ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி,
தந்நோ ஸோம ப்ரசோதயாத்.

திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரிய பரிகார மரம் ‘செங்காலி’ ஆகும். தன் வியாபாரத்துக்;காக சேந்தனார் சேகரித்து வைத்திருந்தாரே, அந்த செங்காலி மரம்தான். மிகவும் அபூர்வமாகவே எந்தக் கோயிலிலும் தல விருட்சமாக இந்த மரம் அமையும். சென்னை, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கான பரிகார விருட்சங்களைப் பராமரிக்கிறார்கள். இது போல் இருக்கக் கூடிய தலங்கள் தவிர, செங்காலி மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட கோயில்களைக் காண்பது அபூர்வமே.
இந்த நட்சத்திரக்காரர்கள் ஆடலரசன் அருள் பாலிக்கும் திருத்தலங்கள் அனைத்தையும் வழிபடலாம்.
சிவபெருமானுக்கு உரிய இதே திருவாதிரை நட்சத்திரத்தில் தான், திருமாலின் வாகனம் எனப் போற்றப்படும் பறவையரசன் பெரிய திருவடியான கருடனும் அவதரித்திருக்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவன் கோயில் செல்லும்போது திருமாலின் வாகனமான கருடபகவானையும் மனதார வழிபடலாம்.
திருவாதிரை நட்சத்திர மந்திரம்
ருத்ர: ஸ்வேத வ்ருஷ்ருடே: ஸ்வேதமால்ய: சதுர்புஜ:மி
சூல கட்க அபயவரான் ததானோ மே ப்ரஸீதது மிமி
ருத்ர(சிவன்) காயத்ரி
ஓம் தத்புருஷ்ய வித்மஹே
மஹாதேவாய தீமஹி-
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்–

புனர் பூசம்
இந்த நட்சத்திரக்காரர்கள் ராமபிரானையே பரிகார தெய்வமாகக் கொள்ளலாம்;. கடக ராசிக்காரர்களுக்கு அருள் பாலிக்கும் கர்க்கடேசுவரர், கும்பகோணத்துக்கு அருகில் நண்டாங்கோயில் என்று அழைக்கப்படும் திருந்துதேவன்குடியில்; காத்திருக்கிறார். அவரையும் வணங்கலாம். வாழ்க்கையில் சந்திக்கும் கடுமையான பிரச்னைகளிலிருந்து அவர் காத்திடுவார். மூங்கிலை, தல விருட்சமாகக் கொண்டுள்ள பிற தலங்களிலும் வழிபடலாம்.
ராமபிரானை மையமாகக் கொண்டுள்ள திருவள்;ர் வீரராகவப் பெருமாள் கோயில், தில்லைவளாகம், வடுவூர், அதம்பார், குடந்தை ராமசாமி கோயில் ஆகியவற்றில் ராமபிரானை வணங்கியும் இவர்கள் பரிகாரம் பெறலாம். திருவள்;ர், மதுராந்தகம், முடிகொண்டான் ஆகிய தலங்களில் கோதண்ட ராமனாக ராமபிரானை சேவிக்கலாம்.
;
மூங்கிலை தல மரமாகக் கொண்ட தலங்கள்!

திருப்பாசூர்: சென்னைக்கு மேற்கில் 50 கி.மீ தொலைவில் உள்ளது. தீண்டாத திருமேனியாக, மூங்கில் அடியில் முளைத்தெழுந்தவர், பாசூர்நாதர்.சோழன் கரிகாலனுக்கு உதவ, இறைவன் பாம்பாட்டியாக வந்த தலம். திருமால், மது – கைடபரைக் கொன்ற பாவம் தீர, ஈசுவரனை வழிபட்ட தலம். தேவாரப்பதிகம் கொண்டது.
திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூருக்கு தென்கிழக்கில் 20கி.மீ. தொலைவில் உள்ளது. கிருபாபுரீசுவரர் – மங்களாம்பிகை அருள் பாலிக்கும் திருத்தலம். சிவபெருமான், சுந்தரமூர்த்தி சுவாமிகளோடு வழக்காடி, தடுத்தாட் கொண்ட தலம். சுந்தரர், இறைவனை ‘பித்தா பிறைசூடி’ என அழைத்து, பதிகம் பாடிய திருத்தலம்.
சீர்காழி: நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு வடக்கே உள்ள தேவாரத் திருத்தலம். திருஞானசம்பந்தரது அவதாரத் தலம். அம்பிகையிடம் ஞானப்பால் அருந்தி, ‘தோடுடைய செவியன்’ எனும்; தேவார முதல் பதிகம் பாடிய தலம். ஊழிpக்காலத்திலும் அழியாத தலம் எனப் புகழ்பெற்றது. பிரம்மபுரீசுவரர் – திருநிலை நாயகி அருள் பாலிக்கும் தலம்.
திருவேட்களம்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு கிழக்கில் 3கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் பாசுபதேசுவரர். அன்னை நல்லநாயகி, வேடனாக எழுந்தருளி, அர்ஜூனனோடு போரிட்டு, அவனுக்கு பாசுபதாஸ்திரம் அருளிய தலம். இங்கு எழுந்தருளியுள்ள கிராதமூர்த்தி கோலம் காணற்கு அரியது.

திருந்துதேவன்குடி: கும்பகோணத்துக்கு அருகில் ‘நண்டாங்கோயில்’ என்று அழைக்கப்படும் திருத்தலம். அருமருந்துடையார் – அருமருந்து நாயகி அருள் பாலிக்கும் தலம். கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய திருத்தலம்.
புனர்பூச நட்சத்திர அதிதேவதை மந்திரம்
அதிதி பீதவர்ணா ச ஸ்ருக்ஸ்ருவெள தர்ப்ப சம்யுதௌமி
ததானா ஸீபதா பூயாத் புனர்வசு க்ருதாஹ்வயா
ராம காயத்ரி
ஓம் தஸரதாய வித்மஹே சீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்.

பூசம்
அரச மரத்தைத் தல மரமாகக் கொண்ட தலங்கள் எல்லாம் உங்களுக்கு வரம் தரும் கோயிலாக இருக்கும்.
ஒழுந்தியாப்பட்டு: திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் உள்ள தலம். தேவாரப் பதிகம் பெற்றது. அரசடி தீர்த்தமும், அரச மரமும் கொண்டது. அரசிலி நாதர் என்று திருநாமம் கொண்டுள்ள ஈசுவரன், பெரிய நாயகியுடன் அருள் பாலிக்கிறார்.
ஆவூர்: கும்பகோணம் – திருக்கருகாவூர் சாலையில் உள்ள திருத்;தலம். பசுபதீசுவரர் – மங்களாம்பிகை அருள் பாலிக்;கும் தலம். காமதேனு வழிபட்ட தலம் என்பதால் ஆவூர் எனப்படுகிறது. ஐந்து பைரவர்கள் சந்நிதி கொண்ட சிறப்பு பெற்றது.
கோனேரிராஜபுரம்: கும்பகோணம் – காரைக்கால் சாலையில் எஸ்.புதூர் என்ற ஊரிலிருந்து 2கி.மீ தூரத்தில் உள்ளது. உலகப் புகழ்மிக்க மிகப்பெரிய நடராஜர் சிலை இங்கு உள்ளது. உமாமகேஸ்வரர் – மங்களாம்பிகை அருள் பாலிக்கும் தலம்.
பரிதிநியமம்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடுக்கு வடக்கே 4கி.மீ. பரிதி (சூரியன்) வழிபட்ட தலம். பாஸ்கரேசுவரர் – மங்களாம்பிகை அருள் பாலிக்கும் தலம். பாஸ்கரேசுவரர் – மங்களாம்பிகை அருள் பாலிக்கும் தலம். பருத்தியப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்.
திருச்சுழி: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு தென்மேற்கில் உள்ள தேவாரத் திருத்தலம். திருமேனிநாதர் – துணைமாலை நாயகி. ருமண மகரி~p அவதாரத் தலம்.
அழகர்கோயில்: திருமாலிருஞ்சோலை என அழைக்கப்படும் தலம். மதுரைக்கு வடக்கிழக்கில் 20கி.மீ. தொலைவில் உள்ளது. கோட்டையுடன் கூடிய பெரிய கோயில். பஞ்சாயுதங்களுடன் பரமசுவாமி, ஸ்ரீதேவி – பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். உற்சவர், ‘அழகர்’ எனும் சுந்கரராஜப் பெருமாள். 108திவ்ய தேசங்களில் ஒன்று.
திருச்சேறை: கும்பகோணம் – திருவாரூர் சாலையில் 15கி.மீ. தொலைவில் உள்ளது. சாரநாதப் பெருமாள் சேவை சாதிக்கிறார். காவிரித்தாய் அரச மரத்தடியில் வீற்றிருக்கிறாள். ஐந்து தேவியருடன் பரந்தாமன் காட்சி தரும் ஒரே திருத்தலம்.
பூச நட்சத்திர மந்திரம்
வந்தே ப்ரஹஸ்பதிம் பு~;ய தேவதாம் திவ்ய விக்ரஹம்,
ஸர்வாபரண ஸம்பன்னம் ஸக்ர மந்த்ரிணமாதராத்,
அதிதேவதை பிரகஸ்பதி மந்திரம்
ஓம் பராவரசாய வித்மஹே
குருவ்யக்தாய தீமஹி,
தந்நோ குரு ப்ரசோதயாத்.

ஆயில்யம்
ஆயில்ய நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
திருப்புறம்பயம்: தஞ்சை மாவட்டம்;, கும்பகோணத்துக்கு வடமேற்கில் 8கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம். சுயம்புலிங்கமாக சாட்சிநாதர் அருள் பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி உரிய 24 தலங்களில் இதுவும் ஒன்று.
திருப்புகலூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்துக்கு கிழக்கே 8கி.மீ. தொலைவில் உள்ளது. அக்னீசுவரர் அருள் பாலிக்கும் தலம். ‘வாஸ்து கோயில்’ எனப் புகழ்பெற்றுள்ளது.
சங்கரன்கோவில்: திருநெல்வேலிக்கு வடக்கே 50கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம். சங்கரலிங்கத்துக்கும் கோமதி அம்மனுக்கும் இடையில் சங்கர நாராயணர் சந்நிதி உள்ளது. இங்கு வழங்கப்படும் புன்னை மரப்பட்டை செல்லரித்து உருவான புற்றுமண் பிரசாதம், எல்லா நோய்களையும் தீர்க்கவல்ல அருமருந்து.
திருப்புனவாசல்;: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 40கி.மீ. தொலைவில் உள்ளது. நான்கு யுகங்களுக்கும் சாட்சியாக இருக்கும் சதுரக்கள்ளி, குருந்த மரம், மகிழ மரம் மற்றும் புன்னை மரங்களை தல விருட்சமாகக் கொண்ட பழம்பதி.
புள்ளபூதங்குடி: கும்பகோணத்துக்கு வடமேற்கில் 11கி.மீ. தொலைவில் உள்ளது. ‘வல்வில் ராமன்’ புஜங்க சயனராக சேவை சாதிக்கிறார். புன்னை மரம் தல விருட்சம்.
திருவிடந்தை: சென்னைக்கு தெற்கில், கிழக்கிக் கடற்கரைச் சாலையில் 42கி.மீ. பயணித்து இந்தத் தலத்தை அடையலாம். ஆதிவராகப் பெருமாள் அகிலவல்லி நாச்சியாருடன் சேவை சாதிக்கிறார். நித்யகல்;யாணப் பெருமாள் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
நாகூர்: நாகை மாவட்டம், நாகப்பட்டினத்துக்கு வடக்கே 4கி.மீ. புன்னாகவனம் என்றழைக்கப்பட்ட, நாகநாதர் – நாகவல்லி அருள் பாலிக்கும் தலம். தல மரம் புன்னை.
ஆயில்ய நட்சத்திர மந்திரம்
ஸர்ப்போ ரக்தஸ் த்ரிநேத்ரஸ் ச பலஸோபி கரத்வய:
ஆஸ்லே~h தேவதா பீதாம்பர த்ருத் வரதோ அஸ்துமே,
ஸர்ப்ப காயத்ரி
ஓம் ஸர்ப்பராஜாய வித்மஹே
சுக்லபாதாய தீமஹி,
தந்நோ அனந்த ப்ரசோதயாத்.

மகம்
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலங்கள்
திருவெண்காடு: நாகை மாவட்டம், சீர்காழிக்குத் தென்கிழக்கே 10கி.மீ. தொலைவில் உள்ள தலம். சோம, சூரிய, அக்னி தீர்த்தங்களும், ருத்ரபாதமும் உள்ள தலம். திருவெண்காட்ட{சுவரர் – பிரம்ம வித்யாம்பிகை, அகோர மூர்த்தி, சௌம்யகாளி சந்நதிகள் சிறப்பு பெற்றவை. நவக்கிரகங்களில் புதன்; தலமாக, தனி சந்நதியோடு விளங்குகிறது.; காசிக்கு சமாமன ஆறு தலங்களில் திருவெண்காடும் ஒன்று.
திருக்கச்சூர்: காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12கி.மீ. திருமால் ஆமை வடிவில் ஈசனை வழிபட்டதால் கச்சூர் எனப்பெயர் கொண்டது. அஞ்சனாட்சி தனி சந்நதியில் கூர்ம தீர்த்தம் புனிதமானது.
திருவரத்துறை: கடலூர் மாவட்டம், திட்டக்குடிக்கு கிழக்கே 10கி.மீ. அறத்துறை நாதர், தீர்த்தபுரீசுவரர் என்றும்; பெயர் கொண்டுள்ளார். அன்னை ஆனந்தநாயகி. சுப்தரி~pகள் வழிபட்ட, திரு ஆலந்துறை உள்ளிட்ட ஏழு தலங்கள் இதனைச் சுற்றி அமைந்துள்ளன.

கீழப்பழுவூர்:; அரியலூர் மாவட்டம், அரியலூருக்கு தெற்கே 10கி.மீ. ஆலந்துறை நாதராக ஈசுவரன் அருந்தவநாயகியுடன் அருள்பாலிக்கிறார். தாயைக் கொன்ற பழிநீங்கிட பரசுராமர் பூசித்த பெருமை கொண்டது.
திருஆலம்பொழில்: தஞ்சை மாவட்டம், திருவையாறுக்கு அருகில் 5 கி.மீ. மேற்கு நோக்கியபடி ஆத்மநாதேசுவரர் அருள்பாலிக்கிறார். ஞானாம்பிகை தனி சந்நதி கொண்டுள்ளாள். அ~;டவசுக்களால் பூசிக்கப்பட்ட தலம்.
திருஅன்பிலாந்துறை: திருச்சி மாவட்டம், லால்குடிக்கு கிழக்கே 8கி.மீ. சத்யவாகீசுவரர், சௌந்தரநாயகி அருள்பாலிக்கும் தலம். செவிசாய்த்த விநாயகர் தனிச்சிறப்பு பெற்றவர். திவ்விய தேச வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழும் அன்பில், திருமாலயன்துறை என்றும் அழைக்கப்படுகிறது. ஆழகிய மணவாளராக சுந்தரராஜப்பெருமாள் சேவை சாதிக்கும் தலம். தாயார் – அழகியவல்லி நாச்சியார்.
திருவாலங்காடு;: (இதே பெயரில் உள்ள இன்னொரு தலம்) கும்பகோணம் – மயிலாடுதுறை பாதையில் உள்ளது. மூலவர், வடாரண்யேஸ்வரர்.
பூரம்
பூர நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
நாலூர்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் – திருவாரூர் சாலையில் உள்ள திருச்சேறைக்கு அருகில் உள்ளது. மாடக்கோயில். பலாசவன நாதர் – பெரியநாயகி அருள் பாலிக்கும் தலம்.
கஞ்சனூர்: கும்பகோணம் – மயிலாடுதுறை (கல்லணை சாலையில்) உள்ள திருத்தலம்;. சுக்கிரன் பரிகாரத் தலமாகப் புகழ் பெற்ற வைப்புத் தலம். அக்னீசுவனரர் – கற்பகாம்பிகை அருள் பாலிக்கும் தலம்.
தலைச்சங்காடு: நாகை மாவட்டம்;, மயிலாடுதுறை – திருக்கடையூர் சாலையில் உள்ள ஆக்கூருக்கு வடக்கில் (சீர்காழி – நாகை சாலையில்) 1கி.மீ தூரத்தில் உள்ளது. கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில், சங்கருணாதேசுவரர் – சௌந்தரநாயகி அருள் பாலிக்கும் தலம். தல மரம் – புரசு என்ற பலாசமரம்.
சிவபெருமானை வழிபட்டு ‘பாஞ்சஜன்யம்’ பெற்ற திருமால், இங்கு தனிக்கோயில் எழுந்தருளியுள்ளார். வெண்சுடர்ப் பெருமாள், நாண்மதியப் பெருமாள் என்பவை அவரது திருநாமங்கள். தலைச்சங்க நாச்சியார் என்ற திருநாமத்துடன் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். சோழ நாட்டு வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று இது.
பூர நட்சத்திர அதிதேவதை மந்திரம்
ஸம்பூஜயாமி அர்யமாணம் பல்குனி தார தேவதாம்,
தூம்ரவர்ணம் ரதாரூடம் ஸஸக்திகர சோயினம்.

உத்திரம்
உத்திர நட்சத்திர பரிகாரத் தலங்கள்
காஞ்சிபுரம்: நெல்லுக்காரத் தெருவில் உள்ள உரட்டை மண்டபம் அருகில் உள்ள அரிசாபந்தீர்த்தார் திருக்கோயில், பிருகு முனிவரால் ஏற்பட்ட சாபத்தை நீக்கிக்கொள்ள திருமால் வணங்கிய தலம்.
திருவக்கரை: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அ;ருகில் 25கி.மீ. தொலைவில் உள்ள தலம். கோயிலின் உள்ளே பிரயோகச் சக்கரத்துடன் கூடிய வரதராஜப் பெருமாள்.
செய்யூர்: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்துக்கு தென்கிழக்கே 24கி.மீ. தெ;hலைவில் உள்ள செய்கையம்பதி. தேவேந்திரன் மற்றும் கௌதமர் வழிபட்ட வன்மீகநாதர் தல இறைவன்.
கூவத்தூர்: செய்யூருக்கு வடக்கே 14கி.மீ சிதம்பரேசுவரர் கோயில்.
மயிலாடுதுறை: கௌரி மாயூரம் என அழைக்கப்படும்; மயிலாடுதுறை நாகை மாவட்டத்தில் உள்ளது. மயிலுருவில் அன்னை, ஈசனை பூஜித்த தலம்;. துலா ஸ்நானம் – முடவன் முழுக்கு சிறப்பு பெற்றது.
(மேலே குறிப்பிட்ட தலங்கள் எல்லாம் கழுதை சுமை தூக்கிக் கடந்து வந்த ஊர்கள்)

அதிதேவதை மந்திரம்
பகம் ரதவராரூடம் த்விபுஜம் சங்க சக்ரிணம்,
பல்குனி தேவதாம் த்யாயேத் பக்;தாபீ~;ட வரப்ரதம்,
மகாலட்சுமி காயத்ரி
ஓம் மஹாலகூ;மியை ச வித்;மஹே வி~;ணுபத்ந்யை ச தீமஹி,
தந்நோ லகூ;மி ப்ரசோதயாத்.

ஹஸ்தம்
ஹஸ்த நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத் தலைநகரான இங்கு அமைந்துள்ளது. கோட்டை கோயில் என்றழைக்கப்படும், நாயகன் குடவேல மரத்தின் கீழ் கோயில் கொண்டதால், வேளாலீசுவரர் எனப்படுகிறார். இங்கு கல்யாண காமாட்சியாக அன்னை அருள் பாலிக்கிறாள்.
இங்கு மற்றொரு சிறப்பம்சம், ராஜதுர்கை அம்மன். சூலமும் சங்கும் ஏந்தி, சூலத்தால் மகி~hசுரனை வதம் செய்த நிலையில், அவன் தோள் மீது ஒரு திருப்பாதத்தை வைத்தபடி காட்சி தருகிறாள். ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதம், மூன்றாவது செவ்வாய் அன்று மட்டுமே, அவளது அழகுக் கோலத்தை முழமையாக தரிசிக்கலாம். மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டுமே.
செய்யாறு: காஞ்சிபுரத்துக்கு தெற்கே 28கி.மீ தொலைவிலுள்ள, திருவத்திபுரம் னெ;று அழைக்கப்படும் தலம். சம்பந்தர் பெருமான் ஆண் பனையை பெண் பனையாக்கிய அற்புதம் நிகழ்ந்த தலம். இறைவன்; – வேதபுரீசுவரர், இறைவி – இளமுலை நாயகி. வேத தீர்த்தம்.
புவனகிரி: கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு வடமேற்கில் 7கி.மீ. தொலைவில் உள்ளது. வேதபுரீசுவரர் – மீனாட்சியம்மன் அருள் பாலிக்கும் தலம்.
ஏமப்பூர்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு அருகில் 2கி.மீ. தொலைவில் உள்ளது. இதுவும் வேதபுரீசுவரரின் திருக்கோயில்தான்.
எழிலூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கு மேற்கில் 4கி.மீ தொலைவில் உள்ள வேதபுரீசுவரர்; ஆலயம்.
திருவாதவூர்: மதுரைக்கு வடகிழக்கில் 18கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் அவதாரத் தலம். புரு~h மிருக தீர்த்தம், இங்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. வேதநாதர் – ஆரணிவல்லியம்மை அருள் பாலிக்கும் தலம்.

அதிதேவதை மந்திரம்
ஸவிதா ரமஹம் வந்தே ஸப்தாஸ்வ ரதவாகனம்,
பத்மாஸனஸ்தம் சாயே~ம் ஹஸ்த நஸ்ஸத்ர தேவதாம்,
சூரிய காயத்ரி
ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹி,
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்.

சித்திரை
சித்திரை நட்சத்திர அன்பர்கள் வழிபடக் கூடிய தலங்கள்
அண்ணன்கோயில்: நாகை மாவட்டம் சீர்காழிக்கு தென்கிழக்கே 8கி.மீ. தொலைவில் உள்ளது. அண்ணன் பெருமாள் கோயில், வில்வமரத்தடியில் திருமால், சூரியவம்ச சுவேதனுக்கு காட்சி தந்த தலம்.
தாடிக்கொம்பு: திண்டுக்கல்லுக்கு வடக்கே 8கி.மீ.தொலைவில் உள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோயில். நாயக்கர் கால சிற்பக் கலைக்கு புகழ்பெற்ற திருத்தலம்.

திருநாராயணபுரம்: கரூர் மாவட்டம், முசிறிக்கு மேற்கில் 15கி.மீ. தொலைவில் உள்ளது. காளமேகப் பெருமாள், பூதேவி – ஸ்ரீதேவி சமேதராக சேவை சாதிக்கிறார். சக்கரத்தாழ்வார் சந்நதி தனிச்சிறப்பு உடையது.
நாச்சியார் கோயில்: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்துக்கு தென்கிழக்கே 9கி.மீ. தொலைவில் உள்ளது. ஸ்ரீநிவாசப் பெருமாள், தாயாரை மணம் புரியும் கோலத்தில் காட்சி தரும் தலம்.

திருவல்லம்: சென்னை – காட்பாடி ரயில்பாதையில் திருவல்லம் ரயில் நிலையத்துக்கு 3கி.மீ. வடகிழக்கே உள்ளது. திருவல்லநாதர், வல்லாம்பிகையுடன் அருள் பாலிக்கும் தலம்.
திருவக்கரை: திண்டிவனம் – புதுச்சேரி பாதையில் உள்ள புகழ்பெற்ற வக்ரகாளி தலம். சந்திரசேகரர், வடிவாம்பிகையுடன் கொலுவீற்றிருக்கிறார்.
திருக்கோயிலூர்: பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்த தலம். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று. வீரட்டேசுவரர் – சிவானந்தவல்;லி இருவரும் தல நாயகர்கள்.

திருவையாறு: தஞ்சாவூருக்கு வடக்கே 11கி.மீ தொலைவில் உள்ள தலம். பஞ்சநதீசுவரர் – அறம் வளர்த்த நாயகி, ஆடி அமாவாசை நாளில் அப்பர் பெருமானுக்கு எம்பெருமான் கயிலாயக் காட்சி அருளிய தலம்.
திருவெறும்பூர்: திருச்சிராப்பள்ளி – தஞ்சை சாலையில் 10கி.மீ. தொலைவில் உள்ளது. தேவர்கள் எறும்பு வடிவம் கொண்டு எறும்பீசரை பூஜித்த தலம்.
திருநெடுங்களம்: திருவெறும்பூருக்கு கிழக்கே 10கி.மீ. தொலைவில் உள்ளது. நித்ய சுந்தரர் – ஒப்பிலாநாயகி.

திருப்பூந்துருத்தி: தஞ்சாவூருக்கு வடக்கே, கண்டியூருக்கு மேற்கில் 3கி.மீ. தொலைவில் உள்ளது. சப்தஸ்தானத் தலங்களில் ஒன்று. பு~;பவன் நாதர் – சௌந்தரநாயகி.
திருக்கண்டியூர்: தஞ்சைக்கு வடக்கில் 10கி.மீ. தொலைவில் உள்ளது. அட்ட வீரட்டத் தலங்களிதல், பிரம்மாவின் தலையைக் கொய்த தலம். பிரம்ம சிரக்கண்டீசுவரர்; – மங்களநாயகி.
திருவலஞ்சுழி: கும்பகோணத்துக்கு மேற்கில் 6கி.மீ. தொலைவில் உள்ளது. வெள்ளைப் பிள்ளையாரால் புகழ்பெற்ற தலம். சுவாமிமலைக்கு அருகில் உள்ளது. செஞ்சடைநாதர் – பெரிய நாயகி.
நன்னிலம்: மயிலாடுதுறை – திருவாரூர் இடையே அமைந்த திருத்தலம். தேவர்கள் தேனீக்களாக வழிபட்ட தலம். மதுவனேசுவரர் – மதுவனநாயகி.
இடும்பாவனம்: திருத்துறைப்பூண்டிக்கு தென்மேற்கில் 16கி.மீ. தொலைவில் உள்ளது. சற்குணநாதர் – மங்களநாயகி.

அதிதேவதை மந்திரம்
த்வஷ்டாரம் ரதமாரூடம் சித்ரா நகூத்ர தேவதாம்|
சங்க சக்ரான்விதகரம் கிரீடிநமஹம் பஜே||
சக்கரத்தாழ்வார் காயத்ரி
ஓம் சுதர்சனாய வித்மஹே மகா ஜ்வாலாய தீமஹி|
தந்நச் சக்ர ப்ரசோதயாத்||

சுவாதி
சுவாதி நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
திருவிடை மருதூர்: குடந்தை – மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் கும்பகோணத்துக்கு வடகிழக்கே 9 கி.மீட்டரில் உள்ளது. இது ஒரு பஞ்சலிங்கத் தலம். வரகுண பாண்டியனுக்கு ஏற்படடிருந்த பிரம்மஹத்தி தோ~த்தை விலக்கியருளிய திருத்தலம். அஸ்வமேத பிராகாரம், பிரணவப் பிராகாரம், கொடுமுடிப் பிராகாரம் ஆகியவற்றை பக்தி சிரத்தையுடன் வலம் வருவதால், முன்வினை தோ~ம் அனைத்திலிருந்தும் விடுபட முடியும். தல மரம் – மருத மரம். மகாலிங்கசுவாமி, மருதவாணராக அருள்பாலிக்கும் தலம் இது. தல நாயகி, பிருஹத்குஜாம்பிகை, தனிச் சந்நதி கொண்டுள்ளார். சந்திர பகவான்; பிரதிஷ்டை செய்து வழிபட்ட 27 நட்சத்திர லிங்கங்களும் ஒரே மண்டபத்தில் அமையப் பெற்றிருப்பது தனிச்சிறப்பு.
திருப்புடை மருதூர்: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு வடகிழக்கே 7கி.மீ. தொலைவில், தாமிர பரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்ட தலம். தைப்பூசத்தன்று தரிசனம் செய்தல் தனிச் சிறப்பு வாய்ந்தது.
பெரிய திருக்கோணம்: அரியலூருக்குத் தென்கிழக்கே 17 கி.மீ மருதையாற்றின் கரையில் அமைந்துள்ள திருத்தலம், ஆதிமத்யார்ஜூனேசுவரர் – பிருஹத்குஜாம்பிகை அருள்பாலிக்கும் தலம்.

கடத்தூர்: கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டைக்கு வடகிழக்கே 18கி.மீ. தொலைவில், அமராவதி ஆற்றின் கரையில் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கும் அர்ஜூனேசுவரர் திருக்கோயில்.
பிள்ளையார்பட்டி: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூருக்கு கிழக்கே 8கி.மீட்டரில் உள்ள மருதங்குடி எனப்படும், மருதீசுவரர் அருள்பாலிக்கும் திருத்தலம். இத்தலத்தில் கற்பக விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்;றவர்.

நயினார் கோயில்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்குக் கிழக்கே 12கி.மீ தொலைவில் மருதமரத்தை தலவிருட்சமாகக் கொண்ட நாகநாதர் திருக்கோயில், வாசுகி தீர்த்தம், மங்கள தீர்த்தம் என்று இருதிருக்குளங்கள்.
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தருகில் உள்ள காட்டழகிய சிங்கர் திருக்கோயில்.

வாயு பகவான் மந்திரம்
வாயும் மிருக வராரூடம் ஸ்வாதி நட்சத்திர தேவதாம்| சர்மோஜ்வலகர த்விதயம் ப்ரணமாம்யஹம்||
நரசிம்ம காயத்ரி
ஓம் வஜ்ரநகாய வித்மஹே தீகூ;ண தம்~;ட்ராய தீமஹி|
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்||

About Author

Advertisement

Post a Comment

 
Top